Thursday, December 7, 2017

சாயம் வெளுக்கும் அரசு பள்ளிகளுக்கு படையெடுக்கும் வண்ணங்கள்


சென்னை.



CSR எனப்படும் Corporate Social Responsibility என்ற கருத்தியலை கொண்டு அரசு பள்ளிகளுக்கு பலவிதங்களில் மேம்பட உதவிவருகிறது சென்னையின் UNITED WAY.
தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை சமூகத்திர்ற்கு கொண்டு சேர்ப்பதே இதன் முதற் கொள்கையாக கொண்டு இயங்கிவருகிறது. இதன் அடிப்படையில் கார்பரேட் நிறுவனங்களிடம் தகுந்த உதவியினை பெற்று அதனை அரசு பள்ளிகள், நியாய விலை கடைகள் போன்று கேப்பாறற்று கிடக்கும் கட்டிடங்களுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் புதுபிப்பதே தலையால கடமையாக செய்துவருகிறது UNITED LIVE. இவர்களால் அரசு கண்டுகொள்ளாத பல  அரசு பள்ளியும் தனியார் பள்ளியும் வித்தியாசம் தெரியாமல் மாறிவிட்டது.

ஐடி(IT) நிறுவனங்களில் வேலைசெய்வோரும், கல்லூரி மாணவர்களும் இந்த சமூக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விடுமுறை நாளான சனிகிழமை அன்று மட்டும் உறுப்பினர் அனைவரும் ஒன்றினைகின்றனர்.
ஒரு பழைய அங்கண் வாடி பள்ளி ஒன்றில் பாழடைந்த சுவரும், சுகாதாரமற்றும் இருந்ததால் அதனை சுத்தம் செய்து வண்ணம் தீட்டியதன் மூலம் அப்பள்ளிக்கு மாணவர்களின் வரத்து அதிகரித்ததால் அதனை தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் இந்த அமைப்பு நடத்தி வருகிறது.

அனைவருக்கும் கல்வி என்பது அரசின் சொல்லாக இருந்தாலும் அதனை நிறைவேற்றுவதில் மும்முரமாக உள்ளது இந்த அமைப்பு. கட்டிடங்களை மட்டும் கட்டும் இந்த அரசு தரப்பானது அதனை பராமரிக்காமல் விடுவதனால் மக்கள் தனியார் மயத்தை நாடி செல்லவேண்டிய நிலை உண்டாகிறது. இந்த நிலைமாறவே LIVE UNITED தொடர்ந்து செயல்படும் என்று உறுதியளிக்கின்றனர்.
முன்னணி நிறுவனங்களில் ஒன்றான நிப்பான் பெயின்ட் நிறுவனம் பள்ளிகளுக்கான வண்ணங்களை கொடுத்து உதவி வருகிறது. அண்ணா பல்கலைகழக மாணவர்கள் பெருமளவில் இதில் இடுபட்டு வருகின்றனர் அதுமட்டுமல்லாமல் அவர்களால் முடிந்தளவு உதவிகளும் பள்ளி மாணவர்களுக்கு கொடுத்து உதவி வருகின்றனர்.
UNITED WAY யின் அடுத்த கட்டமாக சென்னையிலும் சென்னைக்கு அருகிலும் உள்ள குறைந்தது 30 பள்ளிகளுக்கு ஒரே நாளில் வண்ணம் தீட்டுதல் நிகழ்த்துவதாக முடிவுசெய்துள்ளனர். Paint மற்றும் Marathon இரண்டும் இனைந்து PAINTRATHON என்று இதற்கு பெயரிட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு நிற மாற்றம் கொண்டுவருவதே லட்சியமாக கொண்டு செயல்பட்டுவருகிறது இந்த UNITED WAY.

சிறு துளியில் பெரு வெள்ளமாய் இராயப்பேட்டை


    சென்னையின் பழமையான பகுதிகளில் முக்கியமான பகுதி, மைய்யபகுதி இந்த இராயப்பேட்டை. இப்பகுதியின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு தோற்றத்தினை கொண்டிருக்கும். ஆங்கிலேய ஆட்சியின் போது சென்னையில் துண்டு பிரசுரம் முதல் பேனர் கலாச்சாரம் வரை அச்சடிப்பது என்றால் பெயர் சொல்லகூடிய இடங்களில் முக்கிய இடம் இராயப்பேட்டை என்றாலும், அனைத்து வகையான பிரியாணிகளுக்கும், அசைவ உணவிற்கும் இராயப்பேட்டை சிறந்த இடமாகும் ஆகும். அத்தகைய இராயப்பேட்டைக்கு மற்றொரு சிறப்பும் உண்டென்றால் 20வதுக்கு 20 இடத்தில் 20 வீடுகள் இருப்பதுதான். அருகருகில் தொடர்ந்து பல வீடுகளை ஐஸ்ஹவுஸ்(Ice House) பகுதியிலிருந்து பார்க்க முடியும். பெரும்பாலும் இப்பகுதியில் இஸ்லாமிய சமூகத்தினரே இருக்கின்றனர். அதனால் இஸ்லாமிய விஷேஷங்களும் வெகு விமர்சையாக இருக்கும். அந்த மாடிவீடுகள் எல்லாவற்றிலும் தவறாமல் மோட்டார்களும் இருக்கும் அதனை தொடர்ந்து காலையும் மாலையும் இயக்கவும் செய்வார்கள், ஆனால் தண்ணி தான் வரவே வராது. மோட்டரை நம்பாத சிலர் அடிகுழாவை நாடுகின்றனர்.

மாடிவீட்டுகாரர்களுக்கு மட்டும் போனஸ்? 
மற்ற காலங்களில் தண்ணீர் என்பது ஏக்கத்தினை உண்டாக்கும் இப்பகுதியில் மழை வரும்போது மட்டும் இடுப்பளவு  தண்ணீர் நிரம்ப தவறுவதில்லை. அந்த இடுப்பளவு தண்ணீரில் தான் சாக்கடையும் ஓடும் முடிந்தளவு முக்கிக்கொண்டு சில வண்டிகளும் ஓட முயற்ச்சிக்கும். மழை தண்ணிரா? இல்லை சாக்கடை தண்ணிரா?? என்று யூகிக்க முடியாத இந்த நீரானது பிரதான சாலை மட்டுமின்றி சுற்றியுள்ள அக்கம்பக்க வீடுகளையும் விட்டுவைக்காமல் உள்ளே புகுந்து ஒரு அலசு அலசி வீட்டினுள் இருக்கும் குப்பைகள் முதல் பிளாஸ்டிக் பொருட்கள் வரை அனைத்தையும் வெளியே சாலைவரை கொண்டுவருகிறது. மாடிவீடுகளில் இருப்பவர்கள் இந்த ஒரு அவதியிலிருந்து தப்பித்து கொள்ளலாம்.

தண்ணீர் தேங்க காரணம்?
சென்னையின் வெளிப்புற பகுதிகளில் தண்ணீர் தேங்குவதற்கும், வீடுகளில் தண்ணீர் வருவதற்கும் காரணம் ஏறிகள் இருந்த இடம். மற்ற பகுதிகளில் தண்ணீர் தேங்குவதற்கு, மண் சார்ந்த பகுதிகள் இல்லாமல் இருப்பதும் வீடுகளின் எண்ணிகை அதிகரித்து இருப்பதும் ஒரு முக்கிய காரணாமாக உள்ளது. கான்கிரிட் சாலை, சிமெண்ட் சாலை போன்று போன்றவை மட்டுமே நிறைந்து காணப்படுவதும், செடி, கொடி, மரங்கள் இல்லாமல் இருப்பதும் ஒரு முக்கிய காரணமாகும். பின்பு நீர் உறிஞ்சவும், நிலத்தடி நீர் தேக்கவும் வாய்ப்பில்லாமல் போய்டுவிடுகிறது. சாலையின் இரு புறங்களிலும் உள்ள வடிகால் சாக்கடைகளை தூர்வாரி சீரமைத்தாலே போதியளவு தண்ணீர் தேங்கும் பிரச்சனை தீரும்.  

அரசின் தீர்வு?  மக்களின் தீர்வு?
     ஒவ்வொரு முறை தண்ணீர் தேங்கும் போதும் அதனை அரசு அகற்றிவிடுகிறது. தண்ணீர் தேங்காமல் இருக்க என்ன வழி என்பதனை அறிந்து செயல்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். அங்குள்ள மக்களும் மழை வந்தால் தண்ணீர் தேங்கும், வீட்டினுள் வரும் என்ற மனநிலைமைக்கு வந்து விட்டனர். இந்த நிலை மாறி அரசினை நம்பாமல் தானாக முன்வந்து போதுமான வடிகால் சாக்கடைகளை தூர்வாரி பனிகளை மேற்கொண்டால் இந்த துயரங்களிலிருந்து விடுபட வாய்புள்ளது.
சாக்கடைகளிலிருந்து வரும் தூர்நாற்றத்தின் மூலமே பலவிதமான நோய்களுக்கு நுழைவாயிலாக உள்ளது. தண்ணீர் தேக்கத்தினையும், சாக்கடை கழிவுகளையும் இயற்கை என்று மக்கள் அதனை விடுபட நினைத்தால் மக்கள் வாழ தகுதியான இடமாக இருக்கும்.



-    ஜீவா முருகன்








அரைசதம் கடந்த சரளா சந்திரா - FORUM ART GALLERY





7/12/2017, வியாழன்
அடையார், சென்னை.


      வரை கலையில் புது விதமாக மின்னும் பிளாஸ்டிக் காகிதத்தை கொண்டு வரையப்பட்ட மூன்று நாள் ஓவிய கண்காட்சி அடையாரில் அரங்கேறியது. அங்குள்ள ஓவியங்கள் பலவை கடவுள் சார்ந்த படைப்பாகவே இருந்தது. அதிலும் தேவையற்று தூக்கியெறியப்படும் காகிதங்களை கொண்டு ஓவியங்களை படைத்த சரளா சந்திரா (60) அவர்களுக்கு இந்த கண்காட்சி மிகப்பெரிய வெற்றியாக அமைந்திருந்தது.
    
     வட நாட்டினை சேர்ந்தவரான இவருக்கு இது இந்தியாவில் 50வது ஓவிய கண்காட்சி ஆகும். மேலும் வேதியல் முறை மூலம் ஏற்படும் வண்ணங்களை பற்றி முதுகலை பட்டமும் பயின்றவர்.

தங்கம் மற்றும் வெள்ளிநிற Foil பேப்பர்கள் அதிகளவில் இடம்பெற்றிருந்தது. இவற்றில் சில வேதியல் மாற்றம் கொண்டும் செயல் படுத்தியும் வைத்திருந்தது. மரத்தினால் ஆனா உருவ சிலைகளுடன் சில முக்கிய கலைபொருள்களும் முக்கியமானதாக இருந்தது. இந்த மூன்று நாள் கண்காட்சியில் இன்று பெரியவர்களின் ஓவியங்களும் நாளை சிறுவர்களின் ஓவிய கண்காட்சியும் இடம்பெறவுள்ளது.

கலைகளை வெளிக்கொண்டுவரும் முனைப்போடு செயல்படும்இந்த Forum art gallery யானது பல விதமான வரை கலை மற்றும் கைவினை பொருள்களை ஆதரிக்கும் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருகிறது.

- ஜீவா முருகன்