Saturday, August 18, 2018

ஒரு சரித்திரத்தின் கதை

             ஒரு சரித்திரத்தின் கதை
           
      இமயத்தை இழந்த தொண்டர்கள் தங்கள் தலைவனை ஒரு முறையாவது காண வேண்டும் என்று அலை கடல் போல் திரண்டு வந்து அவரின் இறுதி ஊர்வலத்தில் கண்ணீர் கடலாய் கலந்து கொண்ட தமிழக மக்கள்.
            தமிழ் நாட்டில் திராவிடத்தையும் அதான் கொள்கைகளையும் தான் இறுதி மூச்சு வரை கட்டிக் காத்த மாபெரும் தலைவர் dr. மு. கருணாநிதி. இவர் தமிழ் மொழி மேல் அளவற்ற காதல் கொண்டவர். இவர் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் மட்டும் இன்றி இவர் ஒர் இயக்குனர், கவிஞர், தமிழ் புலமை பெற்றவர், சிறந்தக் கதை ஆசிரியர், வசன கர்த்தா இது போன்ற பல திறமைகளை தனக்குள் கொண்டவர். பல நெருக்கடிகளை கடந்து தான் உயிர் மூச்சாக கருதும் தமிழையும், தமிழ் மக்களின் முன்னேற்றத் திற்காகவும் ஆரும்பாடு பட்டவர்.  இவர் ஐந்து முறை தமிழக முதல்வராக பொறுப் பேற்றார். மக்களால் கலைஞர் என்ன அன்பாக அழைக்கப்பட்டார்.  பல முறை மரணப் பிடியில் இருந்து மீண்டு வந்த இவர். ஒரு முறையாவது மரணம் வெற்றி பெற வேண்டி தான் உயிரையே அதற்கு பரிசாக கொடுத்த நாள் ஆகஸ்ட் 7, 2018.

            இவர் இறந்த செய்தியை கேட்டு ஒரு நொடி தமிழகமே தலை சுற்றி நின்றது. அன்று இரவே பல லட்ச மக்கள் கோபாலபுரம் அருகில் குவிய தொடங்கினர். பின்னர் அதிகாலை ஒரு மணி அளவில் கலைஞரின் பூத உடல் தொண்டர்கள் மற்றும் மக்கள் பார்வைக்காக ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டது. நேரம் கடக்க கடக்க மக்கள் கடலாக மாறியது மண்டபத்தை சுற்றியுள்ள பகுதி.  பின்னர் சுமார் 4-கு மணி அளவில் அவரின் கடைசி ஊர்வலம் தொங்கியது.
மக்களின் கண்ணீர் கடலில் மிதந்தபடி கலைஞரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது தங்கள் தலைவனை இந்த நிலையில் காண முடியாமல் மக்களும் கலைஞரின் மகனும் செயல் தலைவருமான ஸ்டாலின் நடந்தே சென்று தான் தந்தையின் இறுதி சடங்கை செய்தனர்.
     
   பல நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலைஞரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். அரசு மரியாதையுடன் சென்னை மெரினா கடற்கரையில் கலைஞரின் உடல் புதைக்கப்பட்டது. அவர் உடல் அளவில் நம்மை விட்டு மறைந்தாலும் மனதளவில் தமிழக மக்களின் உள்ளங்களிலும் தமிழ் மொழியின் வடிவிலும் நம்முடன் வாழ்கிறார்.

Monday, August 6, 2018

நாம் கடந்து வந்தப் பாதையை நோக்கி ஒரு பயணம்.

      நாம் கடந்து வந்தப் பாதையை நோக்கி ஒரு பயணம்.

சென்னை இளைஞர்களால் பெரிதும் வரவேற்கப்படும் 90-களை சேர்ந்த ஜவ வகை இருசக்கர வாகனங்கள்.
                 இன்றைய இளைய தலைமுறையினர் அவர்கள் கடந்து வந்த பாதையை நோக்கி செல்கின்றார் என்றால் அது மிகையாகது. வாகனங்கள் நிறுத்தக் கூட இடம் இல்லாத அளவிற்கு இன்றைய இளைய  தலைமுறையினர் புதிதாய் அறிமுக படுத்தும் வாகனங்களை வாங்கி குவித்துக் கொண்டு இருக்கும் இந்த காலகட்டத்தில். 90-றுகளில் ஒரு புதிய  ட்ரெண்ட் கொண்டு வந்த கிளாசிக் வகையை சேர்ந்த ஜவ மாடல் இரு சக்கர வாகனங்கள் இன்றைய இளைய தலைமுறையினரை பெரிதும் கவர்ந்து வருகிறது.
                   இன்றைய காலத்தில் இளைஞர்களை கவரும் வகையில் தயாரிக்கப்படும் K.T. M, r15, Fz, pulsar  போன்ற ரேஸ் பைக்ஸ் அனைத்தையும் மிஞ்சும் வகையில் ஜவ பைக்ஸ் இன்றைய இளைஞர்களில் மனதை கொள்ளை கொண்டது என்றே சொல்லலாம். இந்த காலத்தில் ஜவ பைக்ஸ்-கு பெரிய வரவேற்புள்ளது. இந்த வகை இருசக்கர வாகனங்கள் சென்னையில் சில இடங்களில் ரெமோடெலிங் செய்து ஆதிகபச்சமாக 40-ல் இருந்து 70-வது ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இவை அனைத்தும் இரும்பு போன்ற உலோகங்களை கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
                 இவை சுமார் 110km வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டன இத்தகைய வண்டிகள் சென்னையிலுள்ள புதுப்பேட்டை, மந்தைவெளி, வேளச்சேரி போன்ற இடங்களில் இருக்கும் மோட்டார் நிருபர்களால் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறன. நம் எதை நோக்கிச் சென்றாலும் சிறந்ததை என்றும் ஏற்போம் என்பதற்கு இந்த ஜவ பைக்ஸ் ஒரு சிறந்த சான்றாய் விளங்குகிறது என்றே கூறலாம்.