Showing posts with label நாடகத்தில் நாட்டின் அவலங்கள். Show all posts
Showing posts with label நாடகத்தில் நாட்டின் அவலங்கள். Show all posts

Tuesday, September 4, 2018

நாடகத்தில் நாட்டின் அவலங்கள்

    நாடகத்தில் நாட்டின் அவலங்கள் 
       
    அதிகார வர்கத்தை எதிர்த்து பல புரட்சிகள் தொடரும் இந்த காலத்தில். அதிகாரத்தை எதிர்த்து நாடக வடிவில் மக்களை அனுகும் கல்லூரி மாணவர்கள்.
    நம் நாட்டில் இன்றைய காலகட்டத்தில்  மக்களுக்காக அரசாங்கம் என்னும் நிலைமை மாறி பெருநிறுவனங்களுக்காக அரசாங்கம் என்னும் நிலை நடைபெறுகிறது. நாட்டு மக்களுக்கும், அரசை விமர்சிக்கும் ஊடக நிருபர்களுக்கும் நடக்கும் அவலங்களை தொகுத்து இன்றைய தலைமுறை மாணவர்கள் அறியாமையில் வாழும் பாமர மக்கள் இடையே நாடக வடிவில் கொண்டு சேர்க்கின்றனர்.

   இவர்கள் அனைவரும் வெவ்வேறு கல்லூரிகளை சேர்ந்தவர்களாவர். இந்த நாடகங்களில் நம் சமுதாயத்தில் நடக்கும் கொடிய செயல்களை சித்தரித்து காட்டுகின்றனர். இவை மட்டுமின்றி நீட் புரட்சி, ஊடகம் நிருபர்கள் படுகொலை, அதிகார வர்கத்தின் வெறிச்செயல், பெண்களின் பாதுகாப்பு, அன்றாட வாழ்வில் மக்களின் துயரங்கள் போன்ற அனைத்தையும் நாடகம் வடிவில் இந்த மாணவர்கள் வெளிப்படுத்துகின்றனர்.
 
       இந்த நாடகத்தின் இயக்குனர் பகுர்தீன் நம் நாட்டின் அவலங்களை தொகுத்து இந்த நாடகத்தை வடிவமைத்துள்ளார். உரிமைகளுக்கு குரல் கொடுத்தல் சிறை என இயங்கும் அரசினை எதிர்த்து எதற்கும் அஞ்சாத  இவர்களின் முயற்சிக்கு மக்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.